சிகிரியா பொலிஸ் பொறுப்பதிகாரி திடீர் மரணம்!

சிகிரியா சுற்றுலா காவல் நிலைய அலுவலர் உபலி கருணாரத்ன திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். உத்தியோகபூர்வ கடமையில் ஈடுபட்டபோது, சிகிரியாவில் அவர் பாதிக்கப்பட்டு சிகிரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்தார். இறந்த அதிகாரி கலேவலவில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரி மாரடைப்பால்உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.